புதுடெல்லி, நவம்பர் 27 – இந்தியா, காசியாபாத் நகரில், பொரித்த கோழி வாங்க பணம் தர மறுத்த மனைவியை, ஆடவன் ஒருவன் கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஷாகித் ஹுசைன் எனும் அந்த ஆடவன் தனது 46 வயது மனைவி நூர் பானோவிடம், சந்தைக்கு சென்று பொரித்த கோழி வாங்க பணம் கேட்டுள்ளான்.
அதனை பானோ தர மறுத்ததால் அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் மூண்டுள்ளது.
எனினும், சற்று நேரத்தில், சந்தைக்கு சென்று பொரித்த கோழி வாங்கி வந்த ஷாகிதுக்கும், பானோவுக்கும் இடையில் சண்டை தொடர்ந்ததால், சினமடைந்த அவன், கத்தரிக்கோல் கொண்டு மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளான்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி பானோ உயிரிழந்ததை தொடர்ந்து, அவ்வாடவன் கைது செய்யப்பட்டான்.
அச்சம்பவத்தை, அந்த தம்பதியின் பிள்ளைகள் கண்கூடாக பார்த்தாகவும் கூறப்படுகிறது.