Latestமலேசியா

வீட்டில் புகுந்த கொள்ளையன் தாக்கியதில் இரு சீனப் பிரஜைகள் காயம்

இஸ்கந்தர் புத்ரி, ஜூன் 3 – ஜோகூரில் கெலாங் பாத்தாவில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த திருடனுடன் ஏற்பட்ட கைகலப்பில் 14 வயது சிறுமியும் அவரது 70 வயது பாட்டியும் காயமடைந்தனர். அவ்வீட்டில் இருந்த விலையூர்ந்த பொருட்களை கொடுத்துவிடும்படி அந்த சந்தேக பேர்வழி கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அவர்களுக்கிடையே கைலப்பு நடத்துள்ளது. எனினும் இந்த சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குள் அவர்களை தாக்கிய சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டான் அந்த நபர் அந்த சிறுமியின் கழுத்தை நெறிக்க முயன்றபோது கைலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து எந்தவொரு பொருட்களையும் எடுக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாக மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் M. குமரேசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்த அதே தினத்தில் பிற்பகல் மணி 2.30 அளவில் 33 வயது சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டான் என்பதோடு அந்நபர் இதற்கு முன் இரண்டு குற்ற பின்னணிகளை கொண்டுள்ளான். தற்போது விசாரணைக்காக அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான். அதே வேளையில் காயம் அடைந்த இருவரும் மருத்துவ சிகிச்சை பெற்றனர் என தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!