கூச்சிங் , டிச 24 – சரவாக், சமரியாங்கில் உள்ள ஆற்றில் தனது மூன்று நண்பர்களுடன் மீன் பிடித்துக்கொண்டிருந்த 15 வயது சிறுவனை முதலை தாக்கியபின் நீருக்குள் இழுத்துச் சென்றது.
இந்த துயரச் சம்பவம் குறித்து நேற்று மாலை மணி 4.27 அளவில் தங்களுக்கு தகவல் கிடைததாக சரவா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பண்டார் பாரு சமரியாங்கிற்கு அருகேயுள்ள சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு 9 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்களைக் கொண்ட குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டதாக அந்த பேச்சாளர் கூறினார்.
இதனிடையே முகமது ஃபக்ருல் என்ற அந்த சிறுவன் மீன் பிடிப்பதில் திறமைசாலியாக விங்கியதாக அச்சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறினர்.