கிள்ளான், மார்ச் 20 – காப்பாரில், கடந்த மார்ச் 6 ஆம் தேதி பாதுகாப்பு காவலரைச் சுட்டுக் கொன்ற சந்தேக நபரை, போலீசார் தேடி வருவதாக தெரியவந்துள்ளது.
‘இந்த வழக்கில் தெளிவான தடயங்கள் எதுவும் இல்லை என்றாலும், சந்தேக நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கும் Kongsi gelap நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை‘ என வட கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவரும், உதவி ஆணையருமான எஸ். விஜய ராவ் கூறியுள்ளார்.
இதனிடையே நேற்று, வட கிள்ளான் மாவட்டத்தின் காவல்துறை துணைத் தலைவர் பதவியை ஒப்படைத்து பொறுப்புகளை ஏற்கும் விழாவுடன் நோன்பு திறக்கும் விருதும், Kelab Kilat Pangsapuri TNB என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வட கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் எஸ். விஜய ராவ் முன்னிலையில், சுப்ரிடெண்டன் முகமட் கைரி ஷாஃபியின் துணைத் தலைவர் பதவி சுப்ரிடெண்டன் முகமட் ரஹிமி ஜைனோலிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் முடிவில், விருந்து உபசரிப்பு மட்டுமல்லாது, ஆதரவற்ற குழந்தைகளுக்கும் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் விருந்தும் நன்கொடைகளும் வழங்கப்பட்டது.