Latestமலேசியா

சமையலறைக்கு அறையில் தங்கம் இருப்பதாகக் கனவு; 130 அடி குழி தோண்டி அதில் விழுந்து பலியான முதியவர்

பிரேசில், ஜன 9 – பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர், சமையலறைக்கு அடியில் தங்கப்புதையல் ஒன்று இருப்பதாக கனவில் கண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் சமயலறைத் தரையைத் தோண்டத் துவங்கியுள்ளார்.

ஒரு ஆண்டாக, சுமார் 130 அடி ஆழம் 35 அங்குல அகலம் அளவுக்கு, சம்பளத்துக்கு ஆள் வைத்து குழி தோண்ட வைத்துள்ளார் ஜோவா பிமென்டா எனும் 71 வயது நபர்.

அப்படியெல்லாம் எதுவும் இருக்காது, இது அபாயகரமான வேலை என்று நண்பர் எச்சரித்தும், அவர் கேட்கவில்லையாம். தான் இதனால் பணக்காரனாகி விடுவேன் என்ற ஆசையோடு அவர் தொடர்ந்து குழி தோண்டி வந்துள்ளதோடு அந்த வேலையை தடுக்கும் ஒரு பாறையை வெடி வைத்து தகர்க்கவும் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 4 வியாழக்கிழமை, ஜோவா அந்த குழியில் தவறி விழுந்து தலையிலும் காலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

கனவில் வந்த தங்கப் புதையல் ஆசையில் தான் தோண்டிய குழியிலே விழுந்து பரிதாபமாக பலியாகிய Joãoவின் சம்பவம், பேராசை பெரும் நஷ்டம் என்பதை உணர வைத்துள்ளதாக அண்டை வீட்டுக்காரர்கள் கருத்துரைத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!