Latestமலேசியா

செராஸ் தாமான் பெர்த்தாமாவில் திடீர் பள்ளம்; சாலைகள் மூடல்; குடியிருப்பாளர்கள் கவலை

செராஸ், மே-9- கோலாலம்பூர், செராஸ், தாமான் பெர்த்தாமாவில் 3 மீட்டர் ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது குடியிருப்பாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜாலான் செலார் – ஜாலான் செலாங்காட் குறுக்குச் சந்திப்பில் ஏப்ரல் 28-ஆம் தேதி அதிகாலை அப்பள்ளம் தோன்றியது.

இதையடுத்து பொது மக்களின் பாதுகாப்புக்காக, அவ்விரு சாலைகளின் ஒரு பகுதியும், ஜாலான் செமேரா பாடி சத்து சாலையும் மூடப்பட்டுள்ளன.

அருகிலுள்ள மேம்பாட்டுத் திட்டக் குத்தகைக்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகளின் போதே, அப்பள்ளம் தோன்றியதாக அறியப்படுகிறது.

என்றாலும், கட்டுமானப் பணிக்கும் அங்சம்பவத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை.

முதலில் அது சிறியதாகத் தான் இருந்தது; பின்னர் பள்ளம் அகலமானதால் சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மோசமாகியுள்ளது; பள்ளம் எப்போது மூடப்படும் என்றும் சரியாகத் தெரியவில்லை என குடியிருப்பாளர்கள் கூறினர்.

இவ்வேளையில் DBKL, மேம்பாட்டாளர் மற்றும் குடியிருப்பாளர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பில், பாதுகாப்புக் கருதி அந்த குறுக்குச் சந்தை தொடர்ந்து மூடி வைப்பதென முடிவெடுக்கப்பட்டதாக செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கொக் வாய் கூறினார்.

பள்ளம் சரிசெய்யப்படும் வரை, போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் குறித்த அறிக்கையை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்மென மேம்பாட்டாளருக்கு DBKL உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இப்பகுதியில் இது போன்று நடப்பது இது முதன் முறையல்ல; சிறிய பள்ளமோ பெரிய பள்ளமோ அது கண்டிப்பாக மக்களுக்கு பீதியைக் கிளப்பும்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு சம்பவமே இன்னும் கண் முன் நிழலாடுகிறது.

எனவே, அப்பகுதியில் நில அமைப்பு மீதான ஆய்வை விரைவுப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!