
புத்ராஜெயா, ஜூன்-7 – தெற்காசிய வட்டாரத்தின் நீடித்த நிலைத்தன்மைக்காக இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதித் தீர்வு காண வேண்டும்.
அதுவே மலேசியாவின் விருப்பம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
தம்மை தொலைப்பேசியில் அழைத்துப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷாரிஃப்பிடம், டத்தோ ஸ்ரீ அன்வார் அந்த எதிர்பார்ப்பை வெளியிட்டார்.
மெக்காவுக்கு ஹஜ் யாத்திரைக்குச் சென்றுள்ள நிலையில் ஷெபாஸ் அங்கிருந்து அன்வாரை அழைத்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் மக்களுக்கும் பிரதமர் ஹஜ் பெருநாள் வாழ்த்துத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் நிலைமை வழக்கத்திற்கு திரும்பியதும், தள்ளிப்போயுள்ள ஷெபாஸின் மலேசிய வருகை மறுஅட்டவணையிடப்படவேண்டுமென்றும் அன்வார் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இரு வழி உறவை தொடர்ந்து மேம்படுத்தவும் பரஸ்பர மரியாதையை நிலைநாட்டிடவும் கூட்டாக பயனடையவும் மலேசியா காத்திருப்பதாக பிரதமர் கூறினார்.
ஆசியான் உச்ச நிலை மாநாட்டை மலேசியா அண்மையில் வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கும், அதன் போது ஷெபாஸ் பிரதமரைப் பாராட்டினார்.
இந்தியா – பாகிஸ்தான் என 2 நாடுகளுடனும் மலேசியா அணுக்கமான உறவைக் கொண்டுள்ள நிலையில், அவ்விரு அணுவாயுத வல்லரசுகளும் அண்மையில் மோதிக் கொண்டன.
மலேசியா அதில் தொடர்ந்து நடுநிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.