
குவந்தான், மே 6 – ரொம்பினிலுள்ள Tebu Hitam வனப் பகுதியில் தனது நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற 62 வயதுடைய ஆடவர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுடும் ஆயுதத்தினால் சுடப்பட்ட காயத்தினால் இறந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து அன்றைய தினமே புகார் ஒன்றையும் போலீஸ் பெற்றதாக பஹாங் போலீஸ் தலைவர் யஹயா ஒத்மான் ( Yahaya Othman) தெரிவித்தார். தனது ஆறு நண்பர்களுடன் அந்த ஆடவர் வேட்டைக்கு சென்றுள்ளார்.
அவர் வைத்திருந்த சுடும் ஆயுதத்தில் அவரது கைவிரல் பட்டதால் வெடித்ததைத் தொடர்ந்து விரலில் பாய்ந்த தோட்டா அவரது நெஞ்சின் வலது பகுதிக்குள் புகுந்ததாக நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் யஹயா தெரிவித்தார்.
நெஞ்சில் ஏற்பாட்ட துப்பாக்கிச் சூட்டு காயத்தினால் அந்த ஆடவர் இறந்ததை Tenku Ampuan Afzan மருத்துவமனையின் சவ பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியது.
இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சட்டவிரோதமாக வேட்டையில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின்பேரில் 35 மற்றும் 67 வயதுடைய ஆறு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து சுடும் ஆயுதங்கள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டன.
1960 ஆம் ஆண்டின் சுடும் ஆயதங்கள் சட்டத்தின் 8ஆவது விதியின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யஹயா கூறினார்