கோலாலம்பூர், மார்ச் 29 – ஐந்து ஆண்டுகளுக்கு முன் 78 வயதுடைய ரெங்கநாயகியை (P.Runkanaikey) கொலை செய்ததோடு அவரது பேரனுக்கு காயம் விளைவித்த குற்றச்சாட்டிலிருந்து ஐவர் விடுதலை செய்யப்பட்டனர். 42 வயதுடைய Sri Mahavishnu, 33 வயதுடைய S .கண்ணதாசன், E. Venthaan, T. Devaraju, K. Vikkines Varan ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டில் சந்தேகம் இருப்பதை எதிர்தரப்பு நிருபித்ததை தொடர்ந்து அவர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்வதாக ஷா ஆலாம் உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். அவர்கள் அனைவரும் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கும் 4.30 மணிக்குமிடையே குற்றவியல் சட்டத்தின் 302ஆவது விதி மற்றும் 324 ஆவது விதியின் கீழ் சபா பெர்ணம் Kampung Teluk Pulai யிலுள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
மேலும் அவர்கள் அனைவரும் 27 வயதுடைய சிலம்பரசனுக்கு கை , தோள்பட்டை மற்றும் காலில் காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது Prosecution தரப்பில் 14 சாட்சிகளும் எதிரர்தரப்பில் 12 சாட்சிகளும் அழைக்கப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்ட இடத்தில் அந்த ஐவரும் இருந்தனரா என்பதை நிருபிப்பதில் எதிர்தரப்பு வழககறிஞர்கள் சந்தேகத்தை ஏற்படுத்தினர். அதன் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி Nurulhuda Nur’Aini Mohamad Nor தீர்ப்பளித்தார்.