Latestமலேசியா

கோலாகங்சாரில் நிகழ்ந்த நகைக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட மூவர் கைது

கோலா கங்சார், நவ 7 – கோலாகங்சாரில் நேற்று நகைக் கடைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து 1.4மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த மூன்று சந்தேகக் பேர்வழிகளும் சிலாங்கூர் ஷா அலாமில் கைது செய்யப்பட்டனர். கொள்ளை நடைபெற்ற மூன்று மணி நேரத்திற்குப் பின் நேற்று நண்பகல் 2.10 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாகங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Omar Baktiar Yaacob தெரிவித்தார். எனினும் கைது செய்யப்பட்ட அந்த சந்தேகப் பேர்வழிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லையென அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!