
தெமெர்லோ, ஜூன் 17 – நேற்று, தெமெர்லோ, சுங்கை பகாங் ஜாலான் ட்ரியாங்-டெமர்லோவின் (Jalan Triang-Temerloh ) கிலோ மீட்டர் 4இல், மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்த 4 வாகனங்கள் மீது, ஒரு பல்நோக்கு வாகனம் (MPV) மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை 1 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் 52 வயதான ‘டொயோட்டா வெல்ஃபயர்’ MPV ஓட்டுநர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் என்று மாவட்ட காவல்துறைத் தலைவர் மஸ்லான் ஹாசன் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் கெமாஸிலிருந்து தெமெர்லோவிற்குச் சென்று கொண்டிருந்த வெல்ஃபயர் ஓட்டுநர், தனது பாதையில் திடீரென நுழைந்த லாரியைத் தவிர்க்க முயலும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ‘எம்பிவி’ ஓட்டுநரின் சிறுநீர் பரிசோதனை எதிர்மறையாக வந்ததாகவும், அவரது வாகனத்தின் கட்டுப்பாட்டைப் பராமரிக்கத் தவறியதற்காக போலீசார் அவரை விசாரித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.