Latestமலேசியா

கற்பழிப்பு குற்றச்செயல்கள் கடந்த ஆண்டு உயர்ந்தது

கோலாலம்பூர், நவ 2 – பாலியல் தொடர்பான குற்றச் செயல்கள் கடந்த ஆண்டு 2.9 விழுக்காடு அதிகரித்திருக்கிறது, நாடு முழுவதிலும் பாலியல் தொடர்பான 3,303 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டில் 3,209 சம்பவங்கள் நிகழ்ந்ததாக புள்ளி விவரத்துறையின் தலைவர் உசிர் மஹிடின் தெரிவித்தார். அவற்றில் கற்பழிப்பு குற்றங்கள் 9.6 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அவர் கூறினார். அதே வேளையில் குற்றச்செயல்கள் மற்றும் வர்த்தக குற்றங்களின் குறியீடு குறைந்துள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற வர்த்தக குற்றங்களின் எண்ணிக்கை 30,536 ஆகியது. எனினும் இணைய குற்றச் செயல்கள் 577 ஆக அதிகரித்தது. கடந்த ஆண்டு வர்த்தக குற்றச்செயல்கள் குறைந்த போதிலும் கள்ள நோட்டுக்கள் மற்றும் கணினி குற்றச்செயல்கள் அதிகரித்தன. நாட்டில் கடந்த ஆண்டு போதைப் பொருள் தொடர்பாக 141,289 குற்றச்செயல்கள் நடைபெற்றதாக உசிர் மஹிடின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!