Latestமலேசியா

நோன்புப் பெருநாள் balik kampung: இன்று முதல் விமான நிலையங்கள் பயணிகளால் நிரம்பி வழியலாம்

செப்பாங், ஏப்ரல் 6 – நோன்புப் பெருநாளுக்காக சொந்த ஊர்களுக்குத் திரும்பும் ஆயிரக்கணக்கானப் பயணிகளால் KLIA விமான நிலையம் இன்று முதல் நிரம்பி வழியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Terminal 1, Terminal 2 இரண்டிலுமே கூட்டம் அலைமோதலாம் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

ஏராளமானோர் முன்கூட்டியே விடுமுறை எடுத்து விட்டதால், Balik Kampung பயணங்களுக்கான உச்ச நேரம் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என்றார் அவர்.

குறிப்பாக, Kuala Lumpur- Kota Kinabalu மற்றும் Kuala Lumpur – Tawau பயணங்களுக்கு AirAsia, Malaysia Airlines, Batik Air ஆகிய மூன்று விமான நிறுவனங்களுக்கும் அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களாகவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு முழு கொள்ளளவில் அப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹரி ராயாவுக்கு மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப போதுமான விமானப் பயணங்கள் இருப்பது மட்டுமல்ல, டிக்கெட் விலையும் நியாயமாக இருப்பது உறுதிச் செய்யப்படும் என்றார் அவர்.

நோன்புப் பெருநாள் வரும் புதன்கிழமை (ஏப்ரல்10), வியாழக்கிழமை (ஏப்ரல்11) கொண்டாடப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!