Latestமலேசியா

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை 472,000 திற்கும் மேற்பட்ட இந்திய சுற்றுப்பயணிகள் மலேசியா வருகை

கோலாலம்பூர், நவ 30 – இவ்வாண்டு ஜனவரி தொடங்கி செப்டம்பர் மாதம்வரை 472,000-த்திற்கும் மேற்பட்ட இந்திய சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வந்துள்ளனர். அதே வேளையில் சீனாவிலிருந்து 1.02 மில்லியன் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை புரிந்ததாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்திருக்கிறார். 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மற்றும் சீன சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிந்திருப்பது இவ்வாண்டு அதிகரித்திருப்தாக பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது Tதியோங் கிங் சிங் கூறினார்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் சுற்றுப்பயணிகளுக்கு டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி 30 நாள் விசா இல்லாத பயணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக இம்மாதம் 27ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார். 30 நாள் விசா விலக்கு அளிக்கப்பட்டதன் மூலம் இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து கூடுதலான சுற்றுப் பயணிகள் மலேசியாவுக்கு வருகை புரிவார்கள் என்றும் தியோங் கிங் சிங் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!