கோலாலம்பூர், நவம்பர் 6 – இவ்வாரம் ஞாயிற்றுகிழமை, இந்தியர்கள் வரவேற்க காத்திருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இலவச சாலை கட்டணத்தை அறிவிப்பது குறித்து, அரசாங்கம் இன்னும் விவாதிக்கவில்லை.
இலவச டோல் கட்டணத்தை வழங்குவது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் நிதி அமைச்சின் ஒப்புதலை பொறுத்தது என, பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான் முஹமட், மக்களவையில் இன்று தெரிவித்தார்.
“அவ்விவகாரம் தொடர்பில், இன்னும் விவாதிக்கப்படவில்லை. அறிவிப்பு இருந்தால், நிதியமைச்சு வெளியிடும்” என அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.
தீபாவளியை முன்னிட்டு, அரசாங்கம் இலவச டோல் கட்டணத்தை வழங்குமா? என ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் முன் வைத்த கேள்விக்கு துணையமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.