Latestமலேசியா

கோம்பாக்கில், போலீஸ் பேருந்து மோதி விபத்துக்குள்ளான வீரா கார் ; ஓட்டுனர் விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்

கோலாலம்பூர், டிசம்பர் 14 – சிலாங்கூர், கோம்பாக், தாமான் கிரின்வூட்டில், போலீஸ் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளான புரோட்டோன் வீரா கார் ஓட்டுனர், விசாரணைக்கு உதவ முன்வருமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஜாலான் பத்து கேவ்ஸ்சில், U வளைவு எடுக்க முடியாமல் பின்னால் நகர்ந்த போலீஸ் பேருந்து, பின்னால் பயணித்த வீரா காரை மோதித் தள்ளியது.

அச்சம்பவம் தொடர்பான, பத்து நிமிட காணொளி, @deafebianschannel1 எனும் டிக் டொக் கணக்கில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை, போலீஸ் அடையாளம் கண்டுள்ளதாக, கோம்பாக் இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் நோர் அரிப்பின் முஹமட் நாசிர் தெரிவித்தார்.

அச்சம்பவம் இம்மாதம் ஆறாம் தேதி, பிற்பகல் மணி 2.30 வாக்கில், கோலாலம்பூர் – பத்து கேவ்ஸ் சாலையில் நிகழ்ந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

1959-ஆம் ஆண்டு சாலை விதிமுறை சட்டத்தின் கீழ், அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

அச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்களும், போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!