Latestமலேசியா

சமூக வலைத்தளத்தில் பரவும் பொய் பிரச்சாரங்களை நம்பாதீர் – டத்தோ ரமணன்

சுங்கைபூலோ, ஏப்ரல் 28 – கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் மே 11 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் பரவும் பொய் பிரச்சாரங்களை நம்பாதீர்கள் என தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோ ரமணன் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலை முன்னிட்டு தொடங்கவுள்ள பிரச்சாரங்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் உண்மையானதா என்பதை இந்தியர்கள் முதலில் உறுதி செய்த பின்னரே அதனை நம்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தல் இந்திய சமூகத்திற்கு மிக முக்கியமான ஒரு தேர்தலாகும். எனவே, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் வாயிலாக வரும் தகவல்களை மட்டும் ஏற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, இன்று சுங்கை பூலோவில் அமானா இக்தியாருடன் இணைந்து நோன்பு பெருநாள் மிக விமரசியாகக் கொண்டாடப்பட்டது.

இக்கொண்டாடத்தில் முக்கிய அங்கமாக சுங்கைபூலோ சுற்றுவட்டாரத்தில் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் 200 பேருக்கு உதவி நிதிகள் வழங்கப்பட்டதை ரமணன் சுட்டிக்காட்டினார்.

அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் பெருநாளை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் ஏற்பாடு செய்த, இன்றைய நோன்பு பெருநாள் விழாவில் ஏறக்குறைய 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!