![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-07-Jun-2024-07-42-PM-8909.jpg)
கோலாலம்பூர், ஜூன் 7 -போர்ட் கிள்ளானில் கடத்தல் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டதன் தெடர்பில் ஒரு நிறுவனத்தின் இயக்குனர், மூன்று அமலாக்க அதிகாரிகள் உட்பட எழுவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 30 மற்றும் 50 வயதுடைய இரண்டு பெண்கள் உட்பட ஐந்த ஆடவர்களைக் கொண்ட அந்த சந்தேகப் பேர்வழிகள் நேற்று போர்ட் கிள்ளான் சுற்று வட்டாரப் பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. மூன்று சந்தேகப் பேர்வழிகள், மூன்று அமலாக்க அதிகாரிகள், நிறுவனங்களின் மூன்று ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் இயக்குநரும் இன்று புத்ரா ஜெயாவிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு அவர்களை தடுத்து வைக்கும் உத்தரவு பெறப்பட்டது.
ஜூன் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைவரை அவர்களை தடுத்து வைக்கும் உத்தரவுக்கு மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார். அந்த கும்பல் சுங்க வரியை தவிர்ப்பதற்காக பொய்யான சுங்க பிரகடனத்தை சமர்ப்பித்ததில் அந்த கும்பல் சப்பந்தட்டாக கூறப்பட்டது. தற்போது தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ள சிங்கப்பூர் பிரஜை ஒருவரும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளார். ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் கைது செய்யப்பட்ட தனிப்பட்ட நபர்களின் 9 வங்கிக் கணக்குகளையும் MACC முடக்கம் செய்துள்ளது.