Latestமலேசியா

உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 19 இடங்கள் முன்னேறி 88-ஆவது இடத்தைப் பிடித்த மலேசியா

கோலாலம்பூர், மே-2, 2025 உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் மலேசியா 19 இடங்கள் முன்னேறி 88-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

RSF எனப்படும் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்ட அப்பட்டியலில், மலேசியா 56.09 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

கடந்தாண்டு 34 இடங்கள் சரிந்து 107-ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்ட மலேசியாவுக்கு, இதுவொரு நல்ல மீட்சியாகும்.

என்றாலும், 2023-ஆம் ஆண்டு பிடித்த 73-ஆவது இடத்துடன் ஒப்பிடுகையில் இந்த 88-ஆவது இடம் இன்னமும் பின்னடைவே.

ஆசியான் வட்டார நாடுகளுடன் ஒப்பிடும் போது, தாய்லாந்துக்கு அடுத்து மலேசியா இரண்டாமிடத்தில் உள்ளது; தாய்லாந்து 85-ஆவது இடத்தையும் புருணை 97-ஆவது இடத்தையும் வகிக்கும் வேளை, சிங்கப்பூர் 123-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இவ்வேளையில் பட்டியலில் முன்னேற்றம் கண்டாலும், மலேசிய ஊடகச் சூழல் இன்னமும் ‘பிரச்னைக்குரிய’ ஒன்றாகவே இருப்பதாக RSF குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தில் 133-ஆவது இடம் அரசியலில் 92-ஆவது இடம் என நாடு மோசமாக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

“அதிகாரத் தரப்பு புலனாய்வு செய்தியாளர்களைக் குறி வைக்கிறது; இனம் மற்றும் மதங்கள் போலவே ஆட்சியாளர்களும் மிகவும் உணர்ச்சிப் பூர்வமான விஷயமாகப் பார்க்கப்படுகின்றனர்” என அவ்வறிக்கை மேலும் கூறியது.

என்ற போதிலும், பொருளாதாரத்தில் 60-ஆவது இடத்தையும் சமூகவியலில் 81-ஆவது இடத்தையும் பாதுகாப்பில் 90-ஆவது இடத்தையும் பிடித்து சற்று மேம்பட்டுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!