
போட்டிக்சன், மே 19 – போட்டிக்சனில் 4ஆவது மைலில் உள்ள சவ்ஜானா கடற்கரைப் பகுதியில் நாய் ஒன்று குளித்துக் கொண்டிந்த காட்சியை பார்த்த வருகையாளர்கள் குறிப்பாக இஸ்லாமிய சமயத்தவர்கள் சங்கடத்திற்கு உள்ளாகினர்.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வளர்ப்பு பிராணி கடலில் குளிக்கும் காட்சியை கொண்ட புகைப்படம் தொடர்பில் பல பார்வையாளர்களுடன் சேர்ந்து, பல்வேறு எதிர்வினை கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன.
அவர்களில் பலர் அந்த பிராணி ஒரு தனிநபருக்குச் சொந்தமானதா அல்லது தெருநாய்தானா என்று தெரியாமல், அந்த விலங்கை அங்கு கொண்டு வந்த செயலை விமர்சித்தனர்.
இந்தக் கடற்கரைக்கு முஸ்லிம் பார்வையாளர்களும் வருகை புரிவதால் அவர்கள் இந்த சம்பவம் குறித்து ஏமாற்றம் அடந்துள்ளனர்.
கடற்கரைக்கு செல்லப்பிராணிகளை கொண்டு வருவதைத் தடைசெய்யும் அறிவிப்பு பலகைகளின் படங்களும் பகிரப்பட்டன.
எனினும் அந்த நாய் கடற்கரைக்கு விளையாட வந்த ஒரு தெரு நாய் என்று சிலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
இதுவரை, அந்த நாய் ஒரு தனிநபருக்குச் சொந்தமானதா அல்லது கைவிடப்பட்ட விலங்காக உள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.