Latestமலேசியா

தாய்லாந்தில் கொடூரம்; மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி கணவர் கொலை – தலையில் மிதித்த மனைவி கைது

பேங்கோக், மே-9-தாய்லாந்தின் Saraburi மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கணவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கணவரை, அவரது மனைவி தனது SUV காரால் வேகமாகப் பின்னால் இருந்து மோதியுள்ளார்.

இதில் நிலைதடுமாறி விழுந்த கணவர் படுகாயமடைந்தார்.

​விபத்தை ஏற்படுத்தியதோடு நிறுத்தாமல், காரிலிருந்து இறங்கி வந்த மனைவி, சாலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கணவரின் தலையில் ஆக்ரோஷமாக மிதித்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும், ஆத்திரத்தில் அவர் கணவரைத் தொடர்ந்து தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

​தலையில் பலத்த காயமடைந்த 38 வயது அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 42 வயது அந்தப் பெண்ணைக் கைதுச் செய்துள்ள தாய்லாந்து போலீஸார், குடும்பப் பிரச்னை மற்றும் பொறாமை காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.

​தற்போது இது குறித்த மேல் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!