கூச்சிங், ஜன 10 – கூச்சிங், கோத்தா செந்தோசாவில் ஆறு கடைகள் சம்பந்தப்பட்ட தீ விபத்தில் 12 வயது மாற்றுத் திறனாளி சிறுவன் கருகி மரணம் அடைந்தான். சுமார் 40 க்கும் மேற்பட்ட தீயணைப்புப் வீரர்கள் தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுயமாக நடமாட முடியாத மாற்றுத் திறனாளி சிறுவன் தீயில் சேதமடைந்த கடை வீடு ஒன்றின் மேல் மாடியிலுள்ள அறையில் இறந்து கிடந்ததாக சரவா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நடவடிக்கையின் துணை இயக்குனர் ஹெண்டேரி அர்டிமான்ஸ்யா தெரிவித்தார். அந்த தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேதத்தின் மதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார். தொடக்கத்தில் கடை வீட்டின் மேல் மாடியில் இருவர் சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததாகவும் தீவிர பரிசோதனக்குப் பின் சிறுவனின் உடல் மட்டுமே கண்டுப்பிடிக்கப்பட்டதாக ஹெண்டேரி கூறினார்.