Latestமலேசியா

ஜூன் 6ஆம் தேதிவரை நாட்டில் 11,000த்திற்கு அதிகமானோர் காச நோயினால் பாதிப்பு – சுகாதார அமைச்சர்

கோலாலம்பூர், ஜூன் 30 – இவ்வாண்டின் ஜூன் 6ஆம்தேதிவரை நாட்டில் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11, 000 த்திற்கும் மேலாக அதிகரித்தது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் இந்நோயின் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4. 4 விழுக்காடு உயர்ந்தபோதிலும் அந்நோயின் நிலை கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் (Dzulkefly Ahmad) தெரிவித்தார்.

ஜூன் 6-ஆம் தேதி நிலவரப்படி, காசநோயால் மொத்தம் 492 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 856 உயிரிழப்புகள் பதிவாகியிருந்த நிலையில், இது 43.1 விழுக்காடு குறைவாகும் என்று நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலில் ( Dzulkefly ) குறிப்பிட்டார்.

நோயாளிகள் முன்கூட்டியே சிகிச்சை பெறுவதை உறுதிசெய்யும் வகையில், நோயைக் கண்டறியும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியதன் விளைவாகவே இந்த எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசியாவில் காசநோயின் தற்போதைய நிலை குறிப்பாக தொற்று , உயிரிழப்புப் போக்குகள் மற்றும் நோயைக் கண்டறிவதில் உள்ள சவால்கள் குறித்து பத்து காஜா பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் வரதராஜு நாயுடு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது Dzulkefly இத்தகவலை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!