![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-07-Jun-2024-07-41-PM-7388.jpg)
கோலாலம்பூர், ஜூன் 7 -கோலாலம்பூர் போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட நடடிக்கையில் முதல் மூன்று நாட்களில் 9,000த்திற்கும் மேற்பட்டோருக்கு குற்றப் பதிவுகளை வழங்கியுள்ளனர். ஜூன் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கிய அந்த நடவடிக்கை ஜூன் 15ஆம் தேதி வரை தொடரும் என கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறையின் தலைவர் துணை கமிஷனர் ஷரிபுடின் முகமட் சாலே ( Sarifudin Mohd Salleh ) தெரிவித்தார். முதல் மூன்று நாட்களில் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 9,247 குற்றப் பதிவுகள் அல்லது சம்மன்கள் வழங்கப்பட்டன.
போக்குவரத்திற்கு தடையாக இருந்த சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தியது, பாதசாரிகளின் நடைபாதையில் நின்றது, லைசென்ஸ் இன்றி வாகனங்களை ஓட்டியது, சாலை வரி இன்றி வாகனங்களை செலுத்தியது , சட்டவிரோத வாகன எண் பதிவுகளை கொண்டிருந்தது மற்றும் சாலையில் மஞ்சள் பெட்டியில் வாகனங்களை நிறுத்தியது போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக இந்த சம்மன்கள் வழங்கப்பட்டதாக ஷரிபுடின் தெரிவித்தார்.