புத்ரா ஜெயா. டிச 22 – போலி கூட்டரசு விருதுகள் விற்பனை செய்யும் கும்பலிடமிருந்து பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் செய்யும்படி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி கேட்டுக் கொண்டுள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் எழுவர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்களில் ஐவரிடம் எம்.ஏ.சி.சி சந்தித்து தகவலை பெற்றதாக அதன் விசாரணை பிரிவின் மூத்த இயக்குனர் ஹிஷாமுடின் ஹாஷிம் கூறினார். போலி கூட்டரசு விருதுகள் விற்கும் கும்பலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நாங்கள் நம்புகிறோம். அவர்கள் விசாரணைக்கு முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இம்மாத தொடக்கத்தில் போலி கூட்டரசு விருதுகள் விற்பனையில் சம்பந்தப்பட்ட கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டனர். 30 முதல் 50 வயதுடைய அரசு சார்பு இயக்கத்தை தலைவரனான பெண் ஒருவரும் இதில் அடங்குவார். அந்த அறுவரும் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்கள் போலி டான்ஸ்ரீ விருதை 20 லட்சம் ரிங்கிட் வரை விற்பதில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டது.