ஜோகூர் பாரு, பிப் 14 – ஜோகூர் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட இரண்டு நாள் நடவடிக்கையில் 65 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். ஜோகூர் பாரு மற்றும் மெர்சிங்கில் திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் 28 இடங்களில் அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குனர் பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார். உள்நாட்டினர் உட்பட 147 தனிப்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட பரிசோதனையில் 20 முதல் 45 வயதுடைய 65 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 30 வங்காளதேசிகள், 18 இந்தோனேசியர்கள், ஏழு இந்திய பிரஜைகள் , ஐந்து பாகிஸ்தானியர்கள் ஆகியோரும் அடங்குவர்.