Latestமலேசியா

கண்ட இடங்களில் குப்பைகள் வீசிய இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட 20 பேருக்கு சமூக சேவை தண்டனை

ஜோகூர் பாரு, ஏப்-30-ஜோகூர் மாநில திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழகம் (SWCorp), இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட மொத்தம் 20 நபர்களுக்கு இன்று ஏழாவது தொடர் சமூக சேவை உத்தரவுகளை விதித்து தண்டனை வழங்கியது.

19 முதல் 63 வயதுக்குட்பட்ட ஒரு பெண் உட்பட அனைத்துக் குற்றவாளிகளும், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைச் சட்டம் 2007 (சட்டம் 672)-இன் பிரிவு 77B(1)-யின் கீழ், பொது இடத்தில் சிறு குப்பைகளைக் கொட்டிய குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட பின்னர், இந்தத் தண்டனையை அனுபவித்து வந்தனர்.

காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த இரண்டு மணி நேரத் தண்டனை,
ஸ்கூடாய் Jalan Pulai Bestari 7 பொழுதுபோக்கு பூங்கா, Taman Pulai Bestari, ஆகிய இடங்களில் SWCorp அமலாக்க அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நிறைவேற்றப்பட்டதாக ஜோகூர் மாநில SWCorp இயக்குநர், ஜைனல் பித்ரி அகமட் (Zainal Fitri Ahmad) கூறினார்.

நீதிமன்ற உத்தரவின்படி, ஒவ்வொரு குற்றவாளியின் மீதமுள்ள தண்டனைகளும் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!