
கோலாலம்பூர், ஜூன்-28-இந்தியா செல்லத் திட்டமிடும் அனைத்துலக பயணிகள் கவனத்திற்கு…
இந்தியாவுக்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கும் புதிய பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சில நாடுகளில் பரவி வரும் Ebola மற்றும் Bundibugyo தொற்றுநோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, இந்த முக்கிய அறிவிப்பை மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவுக்கு வரும் அனைத்து அனைத்துலகப் பயணிகளும் தங்களின் உடல்நலம் குறித்த ‘சுயவிவரப் பிரகடனப் படிவத்தை’ இணையத்தில் பூர்த்திச் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்களின் விமானப் பயணத்திற்கு முன்னரோ, அல்லது இந்தியா வந்தடைவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவோ, அதிகாரப்பூர்வ ‘AIR SUVIDHA 2.0’ இணையப் பக்கத்தின் வழி இதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விமான நிலையத்தில் எவ்விதத் தாமதமும் இன்றி விரைவாகப் குடிநுழைவுச் சோதனைகளைக் கடக்க, பூர்த்திச் செய்யப்பட்ட அந்தப் படிவத்தை அவர்கள் கையில் வைத்திருக்கவோ அல்லது தங்களின் கைப்பேசியில் காண்பிக்கவோ அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணிகள் இதற்கானப் பதிவுகளை airsuvidha.civilaviation.gov.in என்ற இணைய முகவரியில் மேற்கொள்ளலாம்.



